தமிழகம்

திருப்பூர் அருகே போலி மருத்துவ சான்று தயாரித்து நிலமோசடி… : அதிர்ச்சி தகவல்!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டை அருகே உள்ளது பெருமாக்கவுண்டன்பாளையம். இப்பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருபவர் மல்லிகா (48), தனது கணவர் முத்துச்சாமி மற்றும் குழந்தைகளுடன் வசித்துவரும் மல்லிகாவிற்கு தனது தாயார் அருக்காணியம்மாள் கடந்த 2014 ஆம் ஆண்டு தானமாக சொத்துக்களை கொடுத்துள்ளார்.

இந்நிலையில் தனது சொத்துக்களை விற்க முடிவு செய்த மல்லிகாவை கோபிநாத் என்பவர் தொடர்பு கொண்டுள்ளார். பின்னிட்டு தனது கணவர் முத்துச்சாமி காலில் காயம் ஏற்பட்டதாலும், மல்லிகாவிற்கு கண்பார்வை குறைபாடு காரணமாக கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கோபிநாத்திற்கு பவர் பத்திரம் எழுதிகொடுத்துள்ளார். பின்னிட்டு கோபிநாத்தை மல்லிகா தொடர்புகொண்டபோது எந்த ஒரு பதிலும் கூறாதால் தனது சொத்து குறித்த வில்லங்க சான்றை சரிபார்த்தபோது மல்லிகாவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. பவர் பெற்ற கோபிநாத் சத்தியன் என்பருக்கு ரூபாய் 30 லட்சத்திற்கு மல்லிகாவின் சொத்தை விற்பனை செய்திருப்பதும் அதற்கு மருத்துவச்சான்று போலியாக தயாரித்திருப்பதும் தெரியவந்தது.

இதனை அடுத்து தனக்கு நேர்ந்த மோசடி குறித்தும், போலி மருத்துவச்சான்று தயாரித்து பத்திரபதிவு செய்த கோபிநாத் மீது நடவடிக்கை எடுக்க கோரி மல்லிகா திருப்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். புகார் மனு மீது வழக்கு பதிவு செய்த மாவட்ட நில அபகரிப்பு பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button