மாவட்டம்

சிறுமியிடம் கூட்டு பாலியல் வன்புணர்வு ! 9 பேர் மீது வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்குப் பதிவு !

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே சிறுமியை கூட்டுபாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாகிய 9 நபர்களை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த 17 வயது சிறுமி தாத்தா, பாட்டியின்
வீட்டில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக சிறுமியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்துள்ளனர். அப்போது சிறுமி நான்கு மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.

பின்னர் சிறுமியிடம்
உறவினர்கள் விசாரித்த போது, மூன்று சிறுவர்கள் உட்பட 9 பேர் அழைத்துச் சென்று
பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். இதைனைத் தொடர்ந்து உடுமலைப்பேட்டை
அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் ஜெய காளீஸ்வரன்( 19 ), மதன்குமார் ( 19 ), பரணி குமார்( 21), பிரகாஷ் (24), நந்தகோபால் ( 19 ), பவாபாரதி (22) மற்றும் 14, 15. மற்றும் 16 வயது சிறுவர்கள் என மொத்தம் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் உடுமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள். பின்னர் அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாகிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு
பாதுகாப்பு வழங்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாதிக் பாட்சா

செய்தியாளர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button