சினிமா

செல்வமணியின் திருட்டுத்தனத்தை அம்பலப்படுத்திய பாக்யராஜ்

பெப்சி தேர்தலில் வேட்பாளராக நிற்கவேண்டுமானால் அவர் சார்ந்துள்ள சங்கத்தில் செயற்குழு கூட்டத்தைக் கூட்டி நிர்வாகிகள் ஒப்புதலுடன் இவர் தான் எங்கள் சங்கத்தின் சார்பில் பெப்சி தேர்தலில் கலந்துகொள்ளும் வேட்பாளர் என்று பரிந்துரை கடிதம் பெப்சியின் தேர்தல் அதிகாரிக்கு அனுப்புவது வழக்கம்.
ஆனால் தற்போது நடைபெறும் பெப்சி தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஆர்.கே.செல்வமணி தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்தும் அவருக்கு அந்த சங்கத்தின் சார்பில் பரிந்துரை கடிதம் வழங்கப்படவில்லை.

ஏன்? என்று விசாரித்த போது ஏற்கனவே பதிவு ரத்தான சங்கத்தின் சார்பில் பெப்சி தலைவராக தேர்தெடுத்தது செல்லாது என்ற வழக்கில் நீதிமன்றத்தில் செல்வமணிக்கு எதிராக தீர்ப்பு வரும் தருவாயில் இருப்பதால் செல்வமணிக்கு இயக்குனர்கள் சங்கத்தின் சார்பில் பரிந்துரை கடிதம் கொடுக்க விக்ரமன் மற்றும் சில நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் கொடுக்க மறுத்து விட்டனர். அதனால் மிரன்டு போன செல்வமணி எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் போட்டியிட இருப்பதாக கடிதம் கொடுத்திருக்கிறார்.

ஆனால் அந்த கடிதம் செயற்குழுவை கூட்டாமல் செயலாளர் மனோஜ்குமாரும், பொருளாளர் ரமேஷ்கண்ணாவும், தலைவர் பாக்யராஜுக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக கடிதம் கொடுத்திருக்கிறார்கள்.

இது தெரிந்த பாக்யராஜ் கொந்தளித்து செயற்குழுவை கூட்டாமல் யாருக்கும் தெரியாமல் தலைவர் என்ற முறையில் என்னிடமும் கலந்தாலோசிக்காமல் யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக கொடுத்த கடிதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று பெப்சியின் தேர்தல் அதிகாரிக்கு கடிதம் கொடுத்திருக்கிறார்.

இதனால் செல்வமணியின் வேட்புமனுவை நியாயமான தேர்தல் அதிகாரியாக இருந்தால் தள்ளுபடி செய்வார். ஆனால் தற்போதைய தேர்தல் அதிகாரி பாலசுப்பிரமணியம் என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மனதிலும் அலையடிக்கிறதாம்.
தேர்தல் நியாயமான முறையில் நடந்தால் காஸ்டியூமர் மூர்த்தி போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் மனதிலும் உள்ளதாக தெரிகிறது.

இது குறித்து செல்வமணியின் சதியால் வேட்புமனு தள்ளுபடியான பெப்சியின் முன்னால் தலைவர் சிவா தரப்பில் விசாரித்தபோது அவர்கள் நம்மிடம் பேசுகையில்….
“எது எப்படியோ செல்வமணியின் திருட்டுத்தனத்தை இப்போதாவது பாக்யராஜ் அம்பலப்படுத்தினாரே!” என்ற சந்தோஷத்தில் இருப்பதாக தெரிகிறது.

Related Articles

One Comment

  1. Vishal actor.frankshankar. your think good selvamani.roja. bakeyaraj news thankfully.why this happened.with.roja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button