தமிழகம்

பேரிடர் காலத்தில் உதவி வரும் மெஸ் உரிமையாளர்

கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் சாமானிய மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அன்றாட வருமானத்தை வைத்து குடும்பம் நடத்திய ஆட்டோ ஓட்டுநர்கள், சாலையோர வியாபாரிகள்,ஆதரவற்றோர் ஆகியோர்களின் கஷ்டத்தை உணர்ந்து கார்த்திக் மெஸ் உரிமையாளர் மூர்த்தி அரிசி, மளிகைப்பொருட்கள்,காய்கறிகள், உள்ளிட்ட பொருட்களை தொடர்ந்து இலவசமாக வழங்கி வருகிறார்.

தினசரி காவல் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள், பத்திரிகையாளர்கள், துப்புரவு பணியாளர்கள் போன்ற முன்களப் பணியாளர்களுக்கும் தண்ணீர் பாட்டில், டீ பிஸ்கட், கபசுர குடிநீர் போன்றவற்றை இலவசமாக வழங்கி வருகிறார். பல வருடங்களாக குறைந்த விலையில் வயிரார உணவு வழங்கி வருகிறார் கார்த்திக் மெஸ் உரிமையாளர் மூர்த்தி என்பது அனைவரும் அறிந்ததே.

கார்த்திக் மெஸ் உரிமையாளர் மூர்த்தியின் சேவைகளை புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் அனைத்து தரப்பு மக்களும் பாராட்டி வருகிறார்கள்.

முகமது மீரான்

மாவட்ட செய்தியாளர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button