தமிழகம்

சிகிச்சை முடிந்து சென்னை திரும்பும் டி.ராஜேந்தர்

தமிழ் திரையுலகில் பிரபல நடிகரும்,பன்முக கலைஞருமான டி. ராஜேந்தர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கடந்த ஜூன் 14 ஆம் தேதி அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு சிகிச்சை பெற்று பூரண நலம் பெற்று ஜூலை 22 அதிகாலை 2 மணிக்கு சென்னை வந்தடைகிறார்.

டி. ராஜேந்தர் வந்தடையும் அதே நாளில், அவரது மகன் சிலம்பரசன், ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள “மஹா” வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அவருடன் இளையமகன் குறளரசன், மகள் இலக்கியா, மருமகன் அபிலாஷ், பேரன் ஜேசன் ஆகியோரும் நாடு திரும்புகின்றனர். இந்நிலையில் வட அமெரிக்கா தமிழ் சங்கத்தின் சார்பில் பால சாமிநாதன், கால்டுவெல் ஆகியோர் டி. ராஜேந்தரைச் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

சென்னை வந்ததும் தனது சிகிச்சைக்காக உதவி செய்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவிக்க இருக்கிறார். தான் பூரண நலம் பெறவேண்டும் என பிரார்த்தனை செய்த ரசிகர்கள்,குடும்ப நண்பர்கள், கலையுலக பிரமுகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.

லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் சென்னை விமான நிலையத்தில் டி. ராஜேந்தருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button