தமிழகம்

டெல்லியில் விவசாயிகளை அனுமதிக்காத மோடியை தமிழகம் வர அனுமதிக்கமாட்டோம் -: பி.ஆர்.பாண்டியன்

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக இன்றைய தினம் நாடு முழுவதும் இருக்கும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மறியல் போராட்டத்தில் ஈடுபட பாரதிய கிசான் யூனியன் என்ற அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.

இந்நிலையில் சென்னை அண்ணாசாலையில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியன், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்ட 30 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 30 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிமுன் அன்சாரி, விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் 70 நாட்களாக போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கை இதுவரை நிறைவேறவில்லை என தெரிவித்தார்.

பிஆர் பாண்டியன் பேசிய போது, 70 நாட்களுக்கும் மேலாக போராடி வரும் விவசாயிகளை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. விவசாயிகளை கொலை செய்ய வேண்டும் என்பதற்காக மத்திய அரசு வேளாண் சட்டத்தை திரும்பப் பெற மறுக்கிறது. பிரதமர் மோடி தமிழகத்துக்குள் நுழைய தடை விதிப்போம். விவசாயிகளை டெல்லிக்குள் அனுமதிக்காத மோடியை தமிழக விவசாயிகள் அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button