சமூக வலைதளத்தில் பெண்ணை ஆபாசமாக சித்தரித்த வாலிபர் கைது !

திண்டுக்கல்லில் சமூக வலைதளம் மூலமாக போலியாக கணக்கு துவங்கி பெண்ணை அவதூறாக சித்தரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லை சேர்ந்த 23 வயது பெண்ணின் பெயரில் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் போலியாக கணக்கு துவங்கி அதில் ஆபாசமாக பெண்ணின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து பெண்ணின் உறவினர்களிடம் அசிங்கமாகவும், ஆபாசமாகவும் பேசியதாக சம்பந்தப்பட்ட பெண் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் விமல் (31) என்பவர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டது தெரியவந்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.-சாதிக்பாட்ஷா
-சாதிக்பாட்ஷா