தமிழகம்

தொடரும் மணல் திருட்டு கண்டுகொள்ளாத அதிகாரிகள்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் பல்வேறு இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளை கொண்டு பொக்லைன் இயந்திரங்கள் மூலமாக செம்மண் தொடர்ந்து தோண்டி எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது. இதன் காரணமாக விவசாய நிலங்கள் பெருமளவில் கனிம வளங்கள் சுரண்டப்பட்டு நிலத்தடி நீர் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகும் என விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றனர்.

மிகவும் வெளிப்படையாக பட்டப்பகலில் நடைபெற்றுவரும் இந்த மணல் கடத்தல் கிராவல் மண்ணுக்கு உரிமை பெற்று செம்மண் எடுத்து வருவதாகவும் தெரிய வருகிறது .
வருவாய் துறையினருக்கும் காவல்துறையினருக்கும் தெரியவில்லையா? தெரிந்தும் தெரியாததுபோல் உள்ளனரா?…. நடைபெற்றுவரும் திமுக ஆட்சியில் திருப்பூர் மாவட்ட அளவிலான முக்கிய நபர்கள் ஆதரவோடு வெற்றிகரமாக மணல் கொள்ளை நடத்தப்படுவதாக வெளி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

கார்வேந்த பிரபு

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button