தமிழகம்

திருப்பூர் அருகே மாணவன் தற்கொலை…, அதிகாரிகள் விசாரணை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகேயுள்ள கனியூரில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன், பள்ளியில் நடைபெற்ற பருவத் தேர்வில் காப்பி அடித்த போது ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் ஆகியோர் கண்டித்துள்ளனர்.

மேலும் மாணவனின் பெற்றோரை பள்ளிக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளனர். அதன் பிறகு மாணவர்கள் வெளியேறிய சமயத்தில் சம்பந்தப்பட்ட மாணவன் கட்டிடத்தின் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. உடனடியாக மாணவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து உடுமலைப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் தேன்மொழி வேல், முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் குமார் ஆகிய இருவரும், பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் சம்பந்தப்பட்ட மாணவன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button