தமிழகம்

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சி கிளை சார்பில் கன மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சிராப்பள்ளி கிளை தலைவர் ராஜசேகரன் அறிவுறுத்தல்படி கன மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சிராப்பள்ளி கிளை செயலர் ஜவஹர் ஹசன் தலைமை வகித்தார். ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி நிவாரண பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கி துவங்கி வைத்தார். நாச்சிகுறிச்சி பஞ்சாயத்து தலைவர் பூபாலன், இணைச் செயலர் எழில் ஏழுமலை, மோகன், ஆலோசகர் இளங்கோவன், ஆலோசனை குழு உறுப்பினர்கள் லாரன்ஸ், குணா, யோகா ஆசிரியர் விஜயகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், இனியானூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு இலவசமாக கிருமிநாசினி திரவம், முக கவசம், துண்டு, குளியல் சோப்பு, துணி துவைக்கும் சோப்பு, சீப்பு, தேங்காய் எண்ணெய், பற்பசை, பல் துலக்கும் பிரஷ், பெண்களுக்கு நாப்கின், அமிர்தாஞ்சன் உள்ளிட்ட தொகுப்பு பொருட்களை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சிராப்பள்ளி கிளை வழங்கியது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button