மாவட்டம்

கோவில் கல்வெட்டை சேதப்படுத்திய மர்மநபர்கள் ! காவல்நிலையத்தில் புகார்

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே மேலப்பெருங்கரை சதுரங்க நாயகி அம்மன் கோவிலில் உள்ள கல்வெட்டை மர்மநபர்கள் சேதப்படுத்தியது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பரமக்குடி அருகே மேலப்பெருங்கரை கிராமத்தில் பிரசித்தி பெற்ற சதுரங்க நாயகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பால்குட திருவிழா விமர்சையாக நடைபெறும். தினசரி பக்தர்கள் தினசரி அம்மனை தரிசித்து செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று காலையில் பக்தர் ஒருவர் காலையில் அம்மனை தரிசிக்க வந்த போது கல்வெட்டு உடைந்து கிடந்ததைக்கண்டு அதிர்ச்சி அடைந்த நிலையில், கோவில் நிர்வாகத்தினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதுகுறித்து விசாரித்தபோது.. கோவிலில் வளாகத்தில் நேற்று இரவு மர்மநபர்கள் மது அருந்திவிட்டு அங்கிருந்த கல்வெட்டை சேதப்படுத்தியதாக தெரியவந்துள்ளது.

இது குறித்து கோவில் நிர்வாகம் சார்பில் பார்த்திபனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சதுரங்க நாயகி அம்மன் கோவிலில் இருந்த கல்வெட்டை சேதப்படுத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button