மாவட்டம்

உடுமலையில் திமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் பொள்ளாச்சி, தளி சாலைகள் சந்திப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க, செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் ஆலோசனை படியும், மாவட்ட கழக செயலாளர் இல. பத்மநாபனின் வழிகாட்டுதலின் படி கோடை வெயிலின் வெப்பத்தை தணிக்கும் வகையில் பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் குடிநீர் வழங்க நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில்… உடுமலை கிழக்கு திமுக ஒன்றிய  செயலாளர் எஸ் கே மெய்ஞான மூர்த்தி தலைமையில், பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் கே ஈஸ்வர சாமி, உடுமலை நகரக் கழக செயலாளர் C . வேலுசாமி, உடுமலை நகர் மன்ற தலைவர் மத்தீன், ஊராட்சி மன்ற தலைவர்கள் பேச்சியம்மாள் பாலசுப்ரமணியம், காமாட்சி அய்யாவு, ஒன்றிய பெருந்தலைவர் மகாலட்சுமி முருகன், மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் ரயில் கே நாகராஜன், சின்ன வீரம்பட்டி தனபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கினர்

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றிய கழக கிளைக் கழக திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் S.குமார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button