தமிழகம்

வழக்கறிஞர் வெட்டிக்கொலை !சென்னையில் நடந்த கொலைக்கு பரமக்குடியில் பழிக்குப்பழியா ?.!

பரமக்குடியில் இருசக்கர வாகனத்தில், ஹெல்மெட் அணிந்து வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் வழக்கறிஞரை வெட்டி கொலை செய்த சம்பவம் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா, விக்கிரபாண்டியபுரம் வலசை கிராமத்தை சேர்ந்த இருளாண்டி என்பவரின் மகன் உத்திரகுமார். இவர் பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் வசித்து வருகிறார். அதே பகுதியில் இவரது சகோதரி வீடும் உள்ளதாக கூறப்படுகிறது. இன்று இரவு தனது வீட்டில் இருந்து சகோதரி வீட்டிற்கு நடந்து சென்ற போது இருசக்கர வாகனத்தில், ஹெல்மெட் அணிந்து வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் உத்தரகுமாரை சரமாரியாக வெட்டி வெட்டியுள்ளது. இதில் முகம் சிதைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் உத்தரகுமார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், உத்தரகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சென்னை வேளச்சேரியில் கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொழிலதிபர் பழனிச்சாமி என்பவரை கொலை செய்த வழக்கில் உத்திரகுமார் முதல் குற்றவாளி என்பதும், இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்த உத்திரகுமார் சமீபத்தில் சிறையில் இருந்து வெளியில் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் கொலை செய்யப்பட்ட தொழிலதிபர் பழனிசாமிக்கும், உத்திரகுமாருக்கும் ரியல் எஸ்டேட் துறையில் முன்விரோதம் இருந்து வந்த நிலையில், சென்னையில் பழனிச்சாமியை, உத்திரகுமார் தரப்பினர் வெட்டி கொலை செய்துள்ளனர்.

இந்த நிலையில் பழனிச்சாமி தரப்பினர்தான் பழிவாங்கும் விதமாக, உத்திரகுமாரை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர். பரமக்குடியில் வழக்கறிஞர் முகத்தை சிதைத்து வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button