தமிழகம்

குட்கா, பான்மசாலா விற்க நிரந்தர தடைவிதிக்காதது ஏன்?: உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரையைச் சேர்ந்த செந்தில்முருகன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், குட்கா, பான்மசாலா புகையிலை பொருட்களுக்கு ஆண்டுதோறும் தடையை நீட்டித்து தமிழக சுகாதாரத்துறை, புதிய அரசாணை வெளியிடுவதற்கு பதில், புகையிலை பொருட்கள் விற்பனைக்கு நிரந்தர தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு குட்கா, பான்மசாலா போன்றவற்றிற்கு நிரந்தரமாக தடை விதிக்காமல், ஒவ்வொரு ஆண்டும் தடையை நீட்டித்து அரசாணை வெளியிடுவது ஏன்? என கேள்வி எழுப்பினர். தமிழக தலைமை செயலர், தமிழக சுகாதாரத்துறை செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை வருகிற 23ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button