சினிமா

விஜய் நிராகரித்தார்..! விக்ரம் இணைந்தார்.

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் சர்க்கார் படத்திற்குப் பிறகு விஜய்யிடன் இணைந்து மீண்டும் படம் பண்ணலாம் என முயற்சி செய்து வந்தார். ஏற்கனவே சர்க்கார் படத்தின் கதை திருட்டு கதை என்று நிரூபிக்கப் பட்டதால் அந்த நேரத்தில் தேவையில்லாமல் நடிகர் விஜய் சர்ச்சையில் சிக்கினார். இனிமேல் சுயமாக கதையை தயார் செய்து வைத்துள்ள இயக்குனர்களின் படங்களில் மட்டுமே நடிப்பது என முடிவுக்கு வந்து விட்டாராம் விஜய். ஆகையால் நடிகர் விஜய் இயக்குனர் முருகதாஸை நிராகரித்தார். முருகதாஸ் எவ்வளவோ முயற்சி செய்தும் சாத்தியப் படாததால் இந்திப் பக்கம் போனார்.

ஹாலிவுட் பாணியில் விலங்குகளை வைத்து படம் எடுக்க முடிவு செய்து கதையை தேர்வு செய்திருக்கிறார். ஆனால் முருகதாஸ் சொன்ன பட்ஜெட்டில் படம் பண்ண யாரும் முன்வரவில்லை. ஆகையால் மீண்டும் தமிழ் பக்கமே வந்திருக்கிறார்.

இப்போது சியான் விக்ரமிடம் கதையை சொல்லி, இந்த படத்திற்கு பிறகு உங்கள் ரேஞ்சே வேறு லெவல், என விக்ரமின் ஆசையை தூண்டும் விதமாக பேசி விக்ரமிடம் தேதி வாங்கி வைத்துள்ளாராம் ஏ.ஆர். முருகதாஸ். ஏற்கனவே தன் மகனுடன் இணைந்து நடித்த “மகான்” படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காததால் விரக்தியில் இருந்த விக்ரம், இப்போது கொஞ்சம் நிம்மதியாக இருப்பதாக கூறுகிறார்கள்.

இது யார் கதையோ… பட அறிவிப்பு வந்ததும் தான் தெரியவரும். யார் யார் கதை என்னுடையது என்று வரப்போகிறார்களோ என சினிமா வட்டாரத்தில் பரவலாக பேசிவருகிறார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button