தமிழகம்

அம்மா மருந்தகங்கள் மூடப்படவில்லை: தமிழ்நாடு அரசு

அம்மா மருந்தகங்கள் மூடப்படவில்லை என்றும் மாறாக அதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் வெளியிட்ட அறிக்கையில், அம்மா மருந்தகங்களை தமிழ்நாடு அரசு மூடி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தவறான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இயங்கி வந்த அம்மா மருந்தகங்களின் எண்ணிக்கை 131ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பதிவாளர், 5 ஆண்டுகளில் 300 புதிய கூட்டுறவு மருந்தகங்கள் தொடங்க முதலமைச்சரால் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button