தமிழகம்

“தென்னிலை கதிர்” பத்திரிகை அலுவலக திறப்பு விழா.! “நாற்காலி செய்தி”யின் வாழ்த்துக்கள்.

ஊடக உரிமைக்குரல் பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல், நீண்ட காலமாக பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றிய அனுபவமும், பத்திரிகையாளர்களின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்கும் போராட்ட குணமும் தான் அவரை பத்திரிகையாளர் சங்க நிர்வாகியாக உயர்த்தியது. அதேபோல் இன்று “தென்னிலை கதிர்” பத்திரிகையை ஆரம்பித்து அதற்கான அலுவலகத்தையும் திறந்துள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான பத்திரிகையாளர்களுக்கு “ஊடக உரிமைக்குரல்” வடிவேல் என்றால் தெரியும் அளவுக்கு வந்ததற்கு காரணமே எந்த நேரத்திலும் ஏதாவது பிரச்சினை என்று அழைத்தால் உடனடியாக அந்த பிரச்சினை முடியும் வரை உற்ற தோழனாக உடனிருந்து முடித்துக் கொடுப்பார் என்ற நம்பிக்கை தான்.

தர்மபுரி மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் பிறந்து பத்திரிகையாளராக வளர்ந்து இன்று பத்திரிகை ஆசிரியராக உயர்ந்ததற்கு அவரது அயராத உழைப்பும், குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் தான் காரணம். நாட்டில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக, அதிகார வர்க்கத்தினருக்கு அடிபணியாமல், நேர்மையுடனும், துணிச்சலுடனும் இவரது “தென்னிலை கதிர்” மாதம் இருமுறை இதழின் வளர்ச்சி இருக்க வேண்டும் என “நாற்காலி செய்தி” குழுமத்தின் சார்பில் வாழ்த்தி மகிழ்கிறோம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button