தமிழகம்

கணவரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த மனைவி !

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே, குடும்பத் தகராறு காரணமாக கணவனின் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த மோடமங்கலம் கிராமம் எம்ஜிஆர் நகரில் வசித்து வந்தவர் கல்யாணசுந்தரம். தறித்தொழிலாளி. இவருக்கு ஏற்கெனவே திருமணம் ஆகி முதல் மனைவி மற்றும் குழந்தைகள் உள்ள நிலையில் தன்னுடன் வேலை செய்து வந்த பூங்கொடி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார். மேலும் இவர்களுக்கு 21 வயதில் ஒரு மகனும் 19 வயதில் ஒரு மகனும் என இரண்டு மகன்கள் உள்ளனர்.


இந்நிலையில் கல்யாண சுந்தரத்திற்கு பூங்கொடியின் நடத்தையில் சந்தேகம் இருந்துள்ளதால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இந்த சூழலில் காலையில் வேலைக்கு செல்வதாக கல்யாணசுந்தரம் கூறியபோது, பூங்கொடியுடன் வாய்ச் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட தகராறில் கோபமடைந்து கல்யாண சுந்தரத்தை கீழே தள்ளிவிட்ட பூங்கொடி வீட்டில் இருந்த கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து கல்யாணசுந்தரம் தானே கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டதாகவும் பூங்கொடி நாடகமாடியுள்ளார். பின்னர் சற்று நேரத்தில் இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சந்தேகத்தின்பேரில், பூங்கொடியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது பூங்கொடி முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த போலீசார் உரிய முறையில் விசாரித்த போது வேறு சில பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தாகவும், தனது நடத்தையில் சந்தேகம் கொண்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததாகவும் கூறியுள்ளார். இதனால் ஏற்பட்ட சண்டையின் போது, ஆத்திரத்தில் கழுத்தை அறுத்து கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதனை அடுத்த பூங்கொடியை கைது செய்த போலீசார் சம்பவம் குறித்து மேலும் விசாரனை நடத்தி வருகின்றனர்.
இதைப்போலவே மருமகளை காப்பாற்றுவதற்காக, பெற்ற மகன் என்றும் பாராமல் அவரை குத்திக் கொன்ற தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.


குன்றத்தூரை அடுத்த திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் பாண்டியன். 69 வயதாகும் இவருக்கு நாகராஜ் (28 வயது) என்ற மகனும், தீபா என்ற மருமகளும் உள்ளனர். இந்நிலையில், குடிப்பழக்கத்திற்கு அடிமையான நாகராஜ் தினசரி குடித்துவிட்டு, வீட்டிற்கு வந்து சண்டை போடுவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார்.
கடந்த 25ம் தேதி இரவு, இதேபோல, நாகராஜ் தனது மனைவி தீபாவிடம் சண்டையில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அவரது தந்தை பாண்டியன் இதனை தட்டிக் கேட்டுள்ளார். இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். ஒருக்கட்டத்தில் ஆத்திரமடைந்த பாண்டியன், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து, மகன் நாகராஜை சதக் சதக்கென்று குத்திக் கொன்றார்.
இதுபற்றி தகவல் தெரிந்து வந்த போலீசார், வழக்குப் பதிந்து, பாண்டியனை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பாண்டியன், குற்றம் உறுதியானதை தொடர்ந்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மகனை தந்தையே குத்திக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button