தமிழகம்

ஜெயலலிதா நினைவு தினம் – இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் அஞ்சலி.!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆங்காங்கே அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி காமராஜர் நகர் 33, 34 வது வார்டில் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை துணைச் செயலாளர் பி எஸ் தினேஷ் தலைமையில் ஜெயலலிதாவின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செய்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button