தமிழகம்

கல்குவாரியில் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி, 2 பேர் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான கல்குவாரிகள் இயங்கி வருகிறது. இந்நிலையில் சுல்தாண்பேட்டையிலிருந்து ஆக்சிசன் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு காரணம்பேட்டை அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான கல்குவாரிக்கு லாரி மூலமாக ஆக்சிசன் சிலிண்டர்களை ஏற்றி வந்து இறக்கி கொண்டிருந்தனர் .

அப்போது எதிர்பாராதவிதமாக சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் சிக்கி சதீஷ் (38) என்பவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் சீனிவாசன் (38) மற்றும் சிவக்குமார் (35) ஆகிய இருவர் படுகாய்ம் அடைந்தனர். இதனிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பல்லடம் காவல் துறையினர் காயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் உயிரிழந்த சதீஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனிடையே விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button