மாவட்டம்

உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் 24 மணி நேரமும் மது விற்பனை ! கண்டுகொள்ளாத அதிகாரிகள்

திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக உரிய அனுமதி இன்றி செயல்பட்டு வந்த மதுபான கூடங்கள் மூடப்பட்ட நிலையில், தற்பொழுது உரிய அனுமதியின்றி அனைத்து பார்களும் செயல்படுவதோடு 24 மணி நேரமும் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தொழிலாளர்கள் அதிகாலையிலேயே அதிக அளவில் மது அருந்தி மதுவுக்கு அடிமையாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு மது விற்பனையை குறைக்கும் பொருட்டு 500 டாஸ்மாக் கடைகளை மூடிய நிலையில்.. மீண்டும் தலையெடுக்கும் கள்ளச்சந்தை மது விற்பனையால் இளைஞர்கள், அன்றாட தொழிலுக்கு சென்று பிழைப்பு நடத்துவோர் மதுவுக்கு அடிமையாகி வாழ்வினை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

உரிய நடவடிக்கை மேற்கொள்ள சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button