தமிழகம்

தொடரும் ரேஷன் அரிசி கடத்தல் வேட்டை ! கலக்கத்தில் கடத்தல் மன்னர்கள் !

பொது விநியோகத் திட்டத்தின் கீழ், பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் ரேஷன் அரிசியை கடத்தலைத் தடுக்கும் வகையில், குடிமைப் பொருள் வழங்கள் குற்றப்புலனாய்வுத் துறையின் தலைமை இயக்குனர் சீமா அகர்வால் உத்தரவின் பேரில், காவல்துறை தலைவர் ரூபேஷ் குமார் மீனா மேற்பார்வையில், தனிப்படையினர் சென்னை பாடியநல்லூர் பகுதியில் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ஒரு லாரி மற்றும் இரண்டு இலகுரக வாகனங்களை சோதனை செய்தபோது, 37 டன் எடையுள்ள ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது தெரியவந்துள்ளது.

பின்னர் கடத்தலில் ஈடுபட்ட  சந்தோஷ்குமார், மாதவன், ஓட்டுநர் மணிகண்டன் ஆகிய மூவரையும் கைது செய்ததோடு, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். விசாரணையில் செங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசு இலவசமாக வழங்கும் ரேஷன் அரிசியை, குறைந்த விலைக்கு வாங்கி, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு கடத்தி அதிக விலைக்கு விற்பனை செய்வதாக தெரியவந்துள்ளது.

ஆந்திர மாநிலத்திற்கு கடத்திச்சென்ற 37 டன் ரேஷன் அரிசி மூட்டைகளையும், லாரியை பறிமுதல் செய்ததோடு, கடத்தல் கும்பலையும் கைது செய்த அதிகாரிகள் மற்றும் போலீசாரை காவல்துறை இயக்குனர் சீமா அகர்வால் ஐபிஎஸ் வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.

_கே.எம்.எஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button