சினிமா

“நடிகர் சூர்யா” மீது கடுமையான கோபம் கொண்ட “நடிகர் விஜய்”

விஜய்யின் “பீஸ்ட்” படம் வெளியாகி முதல்நாள் எதிர்பார்த்த வியாபாரமும் ஆகியுள்ளது. இரண்டாம் நாள் தமிழ் புத்தாண்டு தினமான இன்று கேஜிஎப்-2 ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தை கன்னட நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழில் நடிகர் சூர்யாவின் சித்தி மகனும், பிரபல தயாரிப்பாளருமான எஸ்.ஆர்.பிரபு வெளியிட்டுள்ளார்.

நடிகர்கள் விஜய்யும், சூரியாவும் இளமைக் காலம் முதல் இன்று வரை நல்ல நட்புடன் இருந்து வருகின்றனர். பீஸ்ட் வெளியான மறுதினம் கேஜிஎப்-2 வெளியானால் பீஸ்ட் படத்தின் வியாபாரம் பாதிக்கும். ஆகையால் கேஜிஎப்-2 படத்தை சில நாட்கள் கழித்து வெளியிடுமாறு நடிகர் சூர்யாவின் குடும்ப நட்பு வட்டத்தில் கூறியிருக்கிறார் நடிகர் விஜய். ஆனால் சூரியா தரப்பில் படத்தை நாங்கள் தயாரிக்க வில்லை.

கன்னட நிறுவனம் தயாரிப்பில் இந்தியா முழுவதும் வெளியிடுகிறார்கள். ஏற்கனவே தியேட்டர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாங்கள் தமிழில் வெளியிடுகிறோம் அவ்வளவு தான். இனிமேல் வெளியீட்டு தேதியை மாற்றம் செய்ய முடியாது என்று கூறியிருக்கிறார்கள்.

தற்போது பீஸ்ட் படத்தின் ரிசல்ட் நெகட்டிவாக இருப்பதால் கேஜிஎப்-2 பீஸ்ட் படத்தின் வியாபாரத்தை கண்டிப்பாக பாதிக்கும் என்பதை பீஸ்ட் படக்குழுவினர் உணர்ந்துள்ளனர். எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் நமக்கு போட்டியாக கேஜிஎப்-2 படத்தை வெளிட்டுள்னர் என நடிகர் சூர்யா மீது கடுமையான கோபத்தில் இருக்கிறாராம் நடிகர் விஜய்.

எஸ்.ஆர்.பிரபு சம்பாதிப்பதற்காக விஜய்யின் நட்பை இழக்கவும் தயாராகி விட்டாரே நடிகர் சூர்யா என பிரபலங்கள் பேசிக்கொள்கிறார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button