தமிழகம்

சென்னை அருகே வாகன சோதனையில் துப்பாக்கியுடன் 3 பேர் கைது, EX கவுன்சிலருக்கு தொடர்பா ?

சென்னை பூந்தமல்லி அருகே, வாகன சோதனையில் கைத்துப்பாக்கியுடன் காரில் வந்த மூன்று வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இறு தினங்களுக்கு முன் இரவு நேரத்தில் நசரத்பேட்டை காவல்நிலைய ஆய்வாளர் குணசேகரன் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நசரத்பேட்டை, திரவுபதி அம்மன் கோயில் அருகே தேசிய நெடுஞ்சாலையில், அசுர வேகத்தில் வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது, அந்த கார் நிற்காமல் போலீசார் மீது மோதுவது போல் வந்து, வேகமாக சென்றது.

இதனைத் தொடர்ந்து அந்த காரை போலீசார் விரட்டி சென்று மடக்கினர். காரில் வந்த 4 பேரில், ஒருவர் மட்டும் இறங்கி தப்பியோடிவிட்டார். மற்ற 3 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து, நசரத்பேட்டை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். காரில் வந்தவர்கள் திருவள்ளூர் அருகே அரண்வாயல் குப்பம் பகுதியைச் சேர்ந்த பிரவீன் (24), நசரத்பேட்டையை சேர்ந்த சுனில் (23), மேப்பூர் தாங்கலை சேர்ந்த நரேஷ்குமார் (23) என்பதும், தப்பியோடியவர் நாகேந்திரன் எனவும் தெரியவந்தது. மேலும், சில மாதங்களுக்கு முன் நசரத்பேட்டை அருகே காரில் சென்ற பாஜக பிரமுகர் பிபிஜிடி.சங்கர் வெடிகுண்டு வீசியும், வெட்டியும் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் கவுன்சிலர் சாந்தகுமார், தங்களிடம் கைத்துப்பாக்கி கொடுத்து வைத்திருந்ததாக பிடிபட்ட மூன்று பேரும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, போலீசார் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, பிரவீன், சுனில், நரேஷ்குமார் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான மூன்று பேரிடமும் கைத்துப்பாக்கி கொடுத்தது உண்மையாகவே மாஜி கவுன்சிலர் தானா? அந்த கைத்துப்பாக்கி மூலம் யாரையாவது கொலை செய்ய திட்டமிட்டு வந்தார்களா ? இல்லை வேறு ஏதேனும் சதித்திட்டமா என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய நாகேந்திரன் என்பவரை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button