மாவட்டம்

பல்லடத்தில் படகு சவாரி ! நெடுஞ்சாலை துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை…

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நெடுஞ்சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரினால் பாதிப்பு ஏற்படுவதை கண்டித்து பல முறை பொதுமக்கள் புகார் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்காததால் படகு சவாரி விட கோரிக்கை விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்லடத்தை அடுத்த மகாலட்சுமி நகர் பகுதி பல்லடம் திருப்பூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இப்பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவர் சாலையில் போதிய வடிகால் வசதியின்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மழைகாலங்களில் சிறிது நேரம் மழை பெய்தாலே மழை நீர் தேங்கி பொதுமக்கள் அங்குள்ள வணிக வளாகங்களுக்கோ, குடியிருப்புகளுக்கோ செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

எனவே நெடுஞ்சாலை துறையும், நகராட்சி நிர்வாகமும் இணைந்து பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வடிகால் வசதி அமைக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button