மாவட்டம்

பழனி முருகன் கோவிலில் “ரோப்கார்” சேவை நிறுத்தம் !

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் முருகனை வழிபட படிக்கட்டுகளில் ஏறி வர முடியாதவர்களுக்கு வசதியாக கம்பி வட ஊர்தி சேவை ( ரோப்கார் ) வழங்குகிறது. இந்த ரோப்கார் பயணத்தில் குழந்தைகள், வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் நாளை வெள்ளிக்கிழமை (23.06.2023) ஒரு நாள் மட்டும் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக கம்பிவட ஊர்தி சேவை ( ரோப்கார் ) இயங்காது என கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர்
கா. சாதிக்பாட்ஷா

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button