தமிழகம்

அமைச்சர் உதயநிதியிடம் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய பத்திரிகையாளர்கள் !

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மார்ச் -17 ஆம் தேதி வெளியாக உள்ள “கண்ணை நம்பாதே” ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

“கண்ணை நம்பாதே” படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் ஆனதும் கலந்து கொள்ளும் முதல் சினிமா விழா என்பதால், படக்குழுவினர் மற்றும் பத்திரிகையாளர்கள் ஏராளமானோர் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க ஆர்வமுடன் காத்திருந்தனர்.

இந்த விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில், விளையாட்டு உபகரணங்களை வழங்கினர்.

பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போது… அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர் பயன்பெறும் வகையில், விளையாட்டு உபகரணங்களை வழங்கிய பத்திரிகையாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பொருட்களை பள்ளி மாணவ மாணவிகளிடம கொண்டு சேர்த்து விடுகிறேன் என்றார். இவ்விழாவில் “கண்ணை நம்பாதே” படக்குழுவினர் மற்றும் பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button