தமிழகம்

துணிவு பட பாணியில் வங்கி கொள்ளையும், துணிச்சலான பொதுமக்களும்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த அலங்கியம் காவல் நிலையம் அருகே அரசுடமையாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் மதியம் ஒரு மணி அளவில் திடீரென பெண் வேடமிட்டு பர்தா அணிந்து வங்கிக்குள் ஒருவர் நுழைந்துள்ளார். உள்ளே சென்றவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் வெடிகுண்டு, துப்பாக்கிய காட்டி மிரட்டி கொள்ளையடிக்க வந்ததாக தெரிவித்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி உள்ளனர்.

இந்நிலையில் வங்கியில் இருந்த ஒருவர் தனது துண்டால் அவரது முகத்தை மூடி தலையில் பலத்த காயத்தை ஏற்படுத்தியுள்ளார். அப்பொழுது அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து அவரை கையும் களவுமாக பிடித்த பொழுது அவர் பெண்ணல்ல ஆண் என்றும் அதே பகுதியில் உள்ள காந்தி நகரைச் சேர்ந்த ஜெயக்குமாரின் மகன் சுரேஷ் என்பது தெரிய வந்தது. உடனே அருகில் உள்ள காவல் நிலையம் சென்று தகவல் தந்ததின் பேரில் விரைந்து வந்த போலீசார் அவரிடம் இருந்த வெடிகுண்டை கைப்பற்றி சோதித்த பொழுது டம்மி என்பதும் கை துப்பாக்கியை வாங்கிய பொழுது ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கப்பட்ட டம்மி கை துப்பாக்கி என்றும் கத்தி கடையில் வாங்கப்பட்டது என்றும் தெரியவந்தது. வெடிகுண்டு துப்பாக்கி டம்மி என்பதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரும் மூச்சு விட்டனர்.

மேலும் இது தொடர்பாக வங்கி மேலாளர் அலங்கியம் காவல்துறைக்கு புகார் தர அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. அவரை பிடிக்கும் பொழுது பொதுமக்கள் தாக்கியதால் தலையில் பலத்த காயம் அடைந்ததால் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக காவல்துறை கண்காணிப்பாளர் தனராசு தாராபுரம் அலங்கியம் சரக காவல் ஆய்வாளர் மணிகண்டனுடன் காவல்துறையினர் தொடர்ந்து அவரை விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில் இவர் தனியார் பாலிடெக்னிக்கில் இரண்டாம் ஆண்டு படித்து வருவதாகவும் இவர் நல்ல ஒழுக்கமான பையன் என்றும் தெரிவித்தனர். இவர் தனிமையிலேயே எப்பொழுதும் பொழுதை கழிப்பதால் எப்பொழுதும் மனநோயாளியாக காட்சியளிப்பார் என்று தெரிவித்தனர். மேலும் அதிக அளவு தமிழ் சினிமா மற்றும் ஆங்கில படங்களை பார்த்து அதுபோல் ஒப்பனை செய்து பார்ப்பார் என்றும் தெரிவித்தனர். தற்பொழுது கூட அண்மையில் வந்த துணிவு படத்தைப் போல் பர்தா அணிந்து உள்ளே வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி வைத்தது போல் காட்சி வந்ததைப் போல் இவரும் செய்து பார்த்துள்ளார் என்றும் பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்.

இவர் மனநோயாளியாக இருப்பதால் முன்பு ஒரு தடவை தற்கொலைக்கு முயற்சியும் செய்துள்ளார் என்றும் தெரிவிக்கின்றனர். எப்பொழுதும் தனிமையில் இருக்கும் இவர் பர்தா அணிந்து வெடிகுண்டு மற்றும் கைது துப்பாக்கி கத்தியை காட்டி மிரட்டி கொல்லையில் ஈடுபட்ட சம்பவம் அலங்கியம் பகுதியில் பெரும் பரபரப்பாய் காணப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button