தமிழகம்

சிவன்மலை ஆண்டவர் கோவில் உத்தரவு பெட்டியில் குங்கும வழிபாடு…பக்தர்கள் உற்சாகம்..

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சிவன்மலையில் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இத்திருத்தலத்தின் சிறப்பு, விநாயகப் பெருமான் முருகனை வணங்கும் தலம் .

இங்கு நாட்டில் வேறு எந்தக் கோவிலிலும் இல்லாத ஒரு சிறப்பாக ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது. சுப்பிரமணிய சாமியே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளைக் கூறி அதை கோவில் முன் மண்டப தூணில் வைக்கப்பட்டுள்ள

உத்தரவு பெட்டியில் வைக்க உத்தரவிடுவார். உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி விவரத்தை கூறினால் சுவாமியிடம் பூபோட்டு கேட்பார்கள். அதன்பின்னர் கனவில் வந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைப்பார்கள்.

இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு காலநிர்ணயம் ஏதும் கிடையாது. இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருள் ஏதாவது ஒருவகையில் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வந்துள்ளது.

இந்நிலையில் ஆண்டவர் உத்தரவு பெட்டியில் மங்களகரமான குங்குமம் வைத்து வழிபட சிவாஜலபதி உத்தரவாக வழங்கி உள்ளார்.இதையடுத்து ஆண்டவன் உத்தரவு பெட்டியில் மங்களகரமான குங்குமம் வைத்து பூஜை செய்யப்படுகிறது. இதன் மூலம் அனைத்து இல்லங்களிலும் மங்கலம் பெருகும் என்பது ஐதீகம். இதனால் அப்பகுதி மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

நமது நிருபர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button