தமிழகம்

அமைச்சர் உதயநிதியிடம் புயல் நிவாரண நிதி ரூபாய் 10 லட்சம் வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன் !

மிக்ஜாம் புயல் – கன மழையைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு பல்வேறு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசின் இந்த முயற்சிக்கு துணை நிற்கும் விதமாக, நிறுவனங்கள் –  இயக்கங்கள் – தனிநபர்கள் என பலரும் மாண்புமிகு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதியளித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியைச் சந்தித்து, நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளார். அவரது செயலைப் பாராட்டும் வகையில், அன்பும் – நன்றியும். ஒன்றிணைந்து செயல்படுவோம் – இயற்கைப் பேரிடரால் ஏற்பட்ட துயர் துடைப்போம் ! என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இவரைப் போல் மற்ற நடிகர்களும் தானாக முன்வந்து புயல் நிவாரண நிதி வழங்க வேண்டும் என திரையுலகில் பேசி வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button