தமிழகம்

திடீர் உடல் நலக்குறைவு.. முதலமைச்சரின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி

முதலமைச்சர் ஸ்டாலினின் தாயார் தயாளுஅம்மா மூச்சுத் திணறல் காரணமாக திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயது மூப்பின் காரணமாக இரவு திடீரென தயாளு அம்மாளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது பின்னர் உடனடியாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

மருத்துவமனைக்கு முதலமைச்சர் ஸ்டாலின், நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பாராளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் ஆகியோர் சென்றுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button