மாவட்டம்

இருசக்கர வாகனத்தில் சென்றவர் வாய்க்காலில் தவறி விழுந்து மரணம் !

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அடுத்த தாந்தோனி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி செல்லத்துரை. இவர் கடந்த இரு தினங்களுக்கு முன் தனது தோட்டத்திற்குச் செல்வதற்காக இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது, பி.ஏ.பி வாய்க்காலில் நிலை தடுமாறி தவறி விழுந்துள்ளார். வாய்க்காலில் தண்ணீரின் வேகம் அதிகரித்திருந்த காரணத்தால், செல்லத்துரை விழுந்ததும் அவர் நீரில் மூல்கி இழுத்துச் செல்லப்பட்ள்ளார்.

பின்னர் சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அவரது உடல் இறந்த நிலையில், கரையோரத்தில் ஒதுங்கி கிடந்துள்ளது. இந்த தகவல் அவரது மனைவிக்கு தெரியவந்ததும், கதறி அழுதபடி கனியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button