தமிழகம்

திருப்பூர் அருகே ரகசியமாக மண் கடத்தும் கும்பல்… : அதிர்ச்சி தகவல்…

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள காமநாயக்கண்பாளையம் அருகே உள்ளது கிருஷ்ணாபுரம் ஊராட்சி. விவசாய நிலங்கள் மற்றும் காற்றாலைகள் நிறைந்து காணப்படும் இப்பகுதியில் அதிக அளவு சட்டவிரோதமாக ரகசிய மண் கடத்தல் கும்பல் செயல்பட்டு சுமார் 50 அடிக்கு மேல் மண் வெட்டி இரவு வேளைகளில் கடத்தி வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பொள்ளாச்சி பல்லடம் சாலையில் அமைந்துள்ள தனியார் பள்ளி கட்டிடத்தின் பின்புறமாக அடர்ந்த முட்புதர் நிறைந்து காணபடும் விவசாய நிலங்களில் பல கோடி அளவிற்கு மண் திருடி லாரிகள் மூலமாக கடத்தி அண்டை மாநிலமான கேரளாவிற்கு கரடிவாவி வழியாக கொண்டு செல்லப்படுவதாக பொதுமக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது போன்று அடர்ந்த முட்புதற் நிறைந்த பகுதியில் ரகசியமாக மண் வெட்டிப் கடத்தப்படும்சம்பவம் குறித்து வருவாய் துறையும், காவல்துறையும் இணைந்து ஆய்வு நடத்தி சட்டவிரோதமாக மண் கடத்தும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுத்து கனிம வளங்களை காப்பாற்றவேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

– நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button