மாவட்டம்

பாட்டிலுக்கு 15 ரூபாய் அதிகமா ? வெகுண்டெழுந்த விசைத்தறி உரிமையாளர் !

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட நாராணாபுரத்தில் வசித்துவருபவர் ராஜ்குமார்(37). விசைத்தறி உரிமையாளரான இவர் மகாலட்சுமி நகருக்கு அருகே செயல்பட்டுவரும் பணானா லீஃப் ரெஸ்ட்டாரண்டிற்கு தனது குழந்தையுடன் சென்றுள்ளார். பின்னர் தனது குழந்தைக்கு சிக்கன் ரைஸ், மஞ்சூரியன் மற்றும் பெப்சி ஆகியவற்றை ஆர்டர் செய்துள்ளார். இதனிடையே ஆர்டருகுறிய பில்லை சப்ளையர் ராஜ்குமாரிடம் கொடுத்துள்ளார். பில்லை பார்த்த ராஜ்குமாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பெப்சியின் எம்.ஆர்.பி விலை ரூ.40/- என பாட்டிலில் அச்சிடப்பட்டிருந்தது. ஆனால் ரூ.15 அதிகமாக பில்லில் போடப்பட்டிருப்பதற்கு விளக்கம் கேட்டதற்கு முறையாக பதில் அளிக்காமல் சப்ளையர் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து பெண் ஊழியர் மற்றும்.அங்கிருந்த ஊழியர்களிடம் ராஜ்குமார் முறையிட்டும் பதில் கூறாமல் அடியாட்களை கொண்டு மிரட்டியதோடு முழுத்தொகையையும் வாங்கிக்கொண்டு ரெஸ்ட்டாரண்டிலிருந்து வெளியேற்றியுள்ளனர்.

பின்னர் சம்பவம் குறித்து செய்தியாளர்களிடையே பேசிய ராஜ்குமார், அரசு நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் பணானா லீஃப் ரெஸ்ட்டாரண்ட் மீது நடவடிக்கை எடுக்க கோரி உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார் அளிக்கப் போவதாக கூறினார். டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 அதிகம் வாங்கிய விவகாரத்தில் சர்ச்சை முடிவதற்குள் கூல்டிரிங்க்ஸ் பாட்டிலுக்கு மேல் ரூ. 15 அதிகம் கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button