மாவட்டம்

சாயல்குடியில் மாணவ, மாணவிகளை கௌரவித்த “மனிதம் GOP அறக்கட்டளை !

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில், சாயல்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அரசுப் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி வருகிறது மனிதம் GOPஅறக்கட்டளை.

அதன் அடிப்படையில் இந்த ஆண்டு கல்விக்கு கண்திறந்த கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு, சாயல்குடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் அரசு பள்ளியில் படித்த 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு பரிசும், பாராட்டும் வழங்குவது என்று முடிவு செய்து, ஜமீன்தார் சிவஞான பாண்டியன், அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஆகியோர் தலைமையில் பாராட்டுவிழா நடைபெற்றது.

இவ்விழாவில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு 10,000 ரூபாயும், இரண்டாவது பரிசாக 7000 ரூபாயும், மூன்றாவது பரிசாக 5000 ரூபாயும் பாராட்டுச் சான்றிதழும் மனிதம் GOP அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், வணிகர் சங்கங்களின் நிர்வாகிகள், சமுதாயத் தலைவர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button