தமிழகம்

மருத்துவ மனையை புனரமைக்க, 14 லட்சம் நிதி வழங்கிய ஜி.டி நாயுடு சேவை நிறுவனம்


கோவையில் ஜி.டி.நாயுடு சேவை நிறுவனம் மற்றும் எஸ்.வி சேவை அறக்கட்டளையும் இணைந்து கோவையிலுள்ள மெஷானிக் மருத்துவ மையத்தின் புனரமைப்புக்காக ரூ 14 லட்சத்திற்கான காசோலையை வழங்கியுள்ளனர். கோவையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிதி வழங்கும் நிகழ்ச்சிக்கு கோவை ரோட்டரி இ – கிளப் கோயமுத்தூர் பிரைட் அமைப்பின் தலைவர் ஜே.வி.செளத்ரி தலைமை வகிக்க இவ்வமைப்பின் பட்டயத் தலைவர் டி.கே.கார்த்திகேயன் முன்னிலையில் மருத்துவமனையை புனரமைக்க ஜிடி நாயுடு சேவை நிறுவனம் சார்பில் நிதி வழங்கியுள்ளது.

கோவையில் உள்ள மெஷானிக் மருத்துவமனை புனரமைப்புக்கான இந்த நிதியை ஜி.டி. நாயுடு சேவை மைய நிர்வாகி செல்வி ரத்னா வர்ஷினி மெஷானிக் 14 லட்சத்திற்கான காசோலையை வழங்க, மருத்துவ மைய தலைமை மருத்துவர் ர. கிருஷ்ணசாமி பெற்றுக்கொண்டு அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button