மாவட்டம்

பழனியில் சாலைகளில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதாரச் சீர்கேடு !

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சிக்கு உட்பட்ட பழனிமலைக்கு பின்புறமாக உள்ள இடும்பன் மலை அருகில் திண்டுக்கல் பிரதான சாலையோரத்தில் குப்பைகள் அதிகளவில் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

சில நேரங்களில் குப்பைகளைக்கு தீ வைப்பதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் , பக்தர்களுக்கும் மிகுந்த சிரமம் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் சுவாச கோளாறு போன்ற பல்வேறு பிரச்சனைக்களுக்கு ஆளாகின்றனர். சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகளால் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் நிலவியுள்ளது.

இது சம்பந்தமாக பழனி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கழிவுகளையும் , குப்பைகளையும் அதற்கான இடத்தில் கொட்டி பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் பொதுமக்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கா.சாதிக்பாட்ஷா
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button