தமிழகம்

என்எல்சி கலவரம் ! பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தியதால் அன்புமணி கைது

நெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளை கைவிடுமாறும், என்எல்சி நிறுவனத்தை நிரந்தரமாக மூடக்கோரியும், என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிட்டு பாமகவினர் அன்புமணி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக காவல்துறையினர் என்எல்சி நிறுவனத்தின் நுழைவாயிலில் தடுப்புகளை அமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர். அன்புமணி சம்பவ இடத்திற்கு வந்ததும் பாமகவினர் ஆவேசமாக கூச்சலிட்டு அன்புமணி தலைமையில் போலீசையும், தடுப்புகளையும் மீறி என்எல்சி நிறுவனத்திற்குள் நுழைய முற்பட்டபோது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் பாமகவினர் கலவரம் செய்யும் நோக்கத்தில் கற்களை வீசி போலீசாரை தாக்கிவிட்டு தடுப்புகளை மீறி உள்ளே சென்றனர்.

அப்போது அன்புமணியை காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். அன்புமணியை அங்கிருந்து அழைத்துச் செல்லக்கூடாது என பாமகவினர் போலீசார் வாகனத்தை கல்வீசி உடைக்கத் தொடங்கினர். உடனடியாக கலவரக்காரர்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் காவலர்கள் ஈடுபட முயன்றதும், காவல் ஆய்வாளர் மீது கல்வீசி அவரது மண்டையை உடைத்து பாமக என்றால் சும்மாவா? என்கிற குரலோடு ஆவேசமாக தாக்குதலில் ஈடுபட்டனர்.

பின்னர் காவல்துறையினர் தண்ணீரை பீய்ச்சி கூட்டத்தைக் கலைக்க முயன்ற போது, காவலர்கள் மீது கல்வீச்சு நடத்தி பாமகவினர் கலவரத்தில் ஈடுபட்டனர். இதையெல்லாம் பொறுமையாக கையாண்ட காவல்துறை மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் நோக்கத்தில் சிறியதாக தடியடி நடத்தி கலவரம் செய்தவர்களை கைது செய்துள்ளனர்.

கலவரம் தொடர்பாக விசாரித்தபோது… பாமகவினர் அன்புமணி தலைமையில் முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவித்துவிட்டு, கலவரம் செய்ய முன்னதாகவே திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர் என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறுகின்றனர். 2024 -ல் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்தில் பாமகவினர் திட்டமிட்டு இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button