தமிழகம்

கோவை அருகே தனியார் மருத்துவ மாணவி தூக்கிட்டு தற்கொலை

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி பல் மருத்துவம் பயின்று வந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கண்ணம்பாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் (ஆர்.வி.எஸ்) பல் மருத்துவக் கல்லூரியில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த சதாசிவம் என்பவரது மகள் சத்திய பிரியா பல் மருத்துவம் பயின்று வந்துள்ளார். நான்காம் ஆண்டு பயிலும் மாணவி சத்யபிரியா கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்துள்ள நிலையில், அவருடன் இரு மாணவிகள் தங்கி படித்து வந்துள்ளனர். சத்யபிரியா காலையிலிருந்து சோகமான மனநிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் காலையில் வழக்கம் போல் கல்லூரி வகுப்புக்குச் சென்று விட்டு மதிய உணவிற்காக விடுதிக்குச் சென்று உள்ளார். பின்னர் மதிய வகுப்பிற்கு சத்திய பிரியா வராமல் இருந்துள்ளார். சந்தேகம் அடைந்த அவருடைய ரூம் மேட் மாணவிகள் சத்திய பிரியாவின் செல்போன் எண்ணுக்கு அழைத்துள்ளனர். பல முறை தொடர்பு கொண்டும் சத்திய பிரியா போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்த மாணவிகள் விடுதி அறைக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது கதவு உள்புறமாக தாளிடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் பின்பக்கமாக உள்ள ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர் அப்போது சத்திள பிரியா தனது துப்பட்டாவால் மேலே இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள் உடனடியாக கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் கல்லூரி நிர்வாகத்தினர் சூலூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று மின்விசிறியில் தூக்கிட்டு இருந்த சத்ய பிரியாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button