தமிழகம்

பழனியில் சிறுவர் பூங்காவை பராமரிக்காத தேவஸ்தான நிர்வாகம் !

திண்டுக்கல் மாவட்டம் பழனி தேவஸ்தான நிர்வாகத்திற்கு உட்பட்ட சிறுவர் பூங்கா பழனி மலையின் பின்புறமுள்ள பழனி – திண்டுக்கல் பிரதான சாலையில் அமைந்துள்ளது. நாள்தோறும் மாலை நேரங்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகளவில் வந்து செல்லும் இடமாக திகழ்கிறது இந்த பூங்கா. மேலும் விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களில் மக்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம்.

சிறுவர் பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்தும், பழுதடைந்தும் இருப்பதால் குழந்தைகள் விளையாடுவதற்கு பாதுகாப்பு இல்லாமலும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அதை உடனடியாக பராமரிப்பு செய்து குழந்தைகள் விளையாடுவதற்கு ஏற்ற வகையில் சரிசெய்ய பழனி தேவஸ்தான நிர்வாகம் முன் வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கா.சாதிக்பாட்ஷா

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button