தமிழகம்

பத்திரப் பதிவு முறைகேடுகளுக்கு எதிராக போர்க்கொடி… நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் !

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சமீப காலமாக பத்திரப் பதிவிற்கு வருபவர்கள் பதிவு செய்ய ஆகும் செலவை கேட்டால் தலை தெரித்து ஓடக்கூடிய அளவிற்கு.லஞ்சம் தலைவிரித்தாடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது பல்லடம் தாலுக்கா. திருப்பூர் மாவட்டம் உருவாவதற்கு முன் கோவை மாவட்டத்தில் இருந்தபோது பல ஆண்டுகளாக பல்லடம் தாலுக்காவிற்குட்பட்ட பகுதியாக திருப்பூர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பல்லடம் பத்திரப் பதிவு அலுவலகம்

இந்நிலையில் 39 கிராமங்களை உள்ளடக்கிய பல்லடம் தாலுக்காவில் அதிக அளவிற்கு பத்திர பதிவு நடைபெறுவது வழக்கம். நாள் ஒன்றிற்கு சுமார் 100 பத்திர பதிவு நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் திருப்பூரில் இருந்து மாறுதலாகி பிரவினா மற்றும் ஈஸ்வரி ஆகிய இரண்டு பதிவாளர்கள் பல்லடம் பத்திர பதிவு துறை அலுவலகத்திற்கு மாறுதலாகி வந்தனர். இரட்டை சகோதரிகளாக செயல்பட்ட இவர்கள் வந்த பிறகு அடிக்கடி பத்திர எழுத்தர்களுக்கும் இருவருக்கும் இடையே பெரும் இடைவெளி விழுந்தது. எதற்கெடுத்தாலும் குற்றம் குறை சொல்லியே பத்திரங்களை திருப்ப அனுப்பிவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

பதிவாளர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பதிவுத்துறை ஊழியர்கள்

மேலும் ஒரு பத்திர எழுத்தர் பொதுமக்களிடம் பதிய முடியாமல் பதிவாளார்களால் திருப்பி கொடுத்த பத்திரம் அடுத்த சில நாட்களில் மற்றொருவரை வைத்து பத்திர பதிவு செய்துவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் லட்சக்கணக்கில் லஞ்சம் கேட்பதால் பத்திரப்பதிவு செய்ய வரும் பொது மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். இடத்திற்கான அரசு மதிப்பீட்டை விட சகோதரிகள் கேட்கும் லஞ்சம் அதிகமாக கேட்பதாக கூறப்படுகிறது. இதோடு லஞ்சம் வசூல் செய்து கொடுக்கும் புரோக்கர்களின் பத்திரம் மட்டுமே அதிக அளவில் பதிவு செய்யப்பட்டு வருவதற்கு பத்திர எழுத்தர்கள், தட்டச்சர்கள், பத்திரம் தயாரிப்பவர்கள் என 70 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பதிவாளர் பிரவினா

இதனிடையே பொறுமை இழந்து வெறுத்துப் போன பத்திர எழுத்தர்கள் பத்திர பதிவாளர்கள் ஈஸ்வரி, பிரவினாவ ஆகிய இருவருக்கும் எதிராக தங்களது போராட்டத்தை துவங்கியுள்ளனர். முதலமைச்சர் தனிப்பிரிவு, பத்திர பதிவுத்துறை ஐஜி உட்பட பல்வேறு துறைகளுக்கு.புகார் மனுக்களை அனுப்பியுள்ளனர். மேலும் வெளிப்படையாக லஞ்சம் பெறும் இருவர் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி ஒருவாரம் அடையாள பத்திர பதிவை நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பத்திர எழுத்தர்கள் அறிவித்துள்ளனர்.

பதிவாளர் ஈஸ்வரி

லஞ்ச ஒழிப்பு துறை, பத்திரிகை துறை, பத்திரப்பதிவுத்துறை, சமூக ஆர்வலர்கள் என அனைவரையும் துச்சமென எண்ணி லஞ்சப்பணத்திற்கு பல் இழிக்கும் பத்திர பதிவிற்கு எழுத்தர்கள் கொடுத்த பதிலடி தற்போது சரவெடியாக மாறி போராட்ட களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. இதனிடையே பத்திரவு பதிவுத்துறை டிஐஜி சாமிநாதன் தலைமையில் பல்லடம் பத்திர பதிவு அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் போது பத்திர எழுத்தர்கள் தங்களது புகார்களை தெரிவித்துள்ளனர்.

டிஐஜி விசாரணை செய்தபோது…

மேலும் பத்திர பதிவாளர்கள் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்குமாறு டிஐஜி கேட்டுள்ளார். பின்னர் வருகிற 24 ஆம் தேதி அடுத்த விசாரணை நடைபெறும் என தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் தங்களிடம் பட்டா மாறுதல் மற்றும் பத்திர பதிவிற்காக அதிக அளவு லஞ்சம் பெற்றதாக பகீர் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இதனிடையே பதிவாளர் இருவர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் நடத்தப்போவதாக பத்திர எழுத்தர்கள் தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button