தமிழகம்

பல்லடத்தில் ரியல் எஸ்டேட் அலுவலகமானதா ? பத்திரப்பதிவு அலுவலகம் !

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மங்கலம் சாலையில் செயல்பட்டு வருகிறது சார் பதிவாளர் அலுவலகம். இங்கு தினந்தோறும் ஏராளமான பத்திரப்பதிவு நடைபெற்று வருவதால் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் திடீரென பத்திர பதிவு அலுவலகம் ரியல் எஸ்டேட் அலுவலகமாக மாறிவிட்டதா? என பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். அலுவலகம் முன்பாக தனியார் ரியல் எஸ்டேட் விளம்பரப்பலகை வைக்கப்பட்டிருப்பதும் அதை கடந்த மூன்று நாட்களாக அதிகாரிகள் வேடிக்கைப்பார்த்து செல்வதும் பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அரசு அலுவலக வளாகத்தில் தனியார் விளம்பரம் செய்யக்கூடாது என சட்டம் இருந்தும் தைரியமாக இது போன்று விளம்பரம் செய்வது அதிகாரிகாளின் ஆசியோடு நடந்துக்குமோ? என பொதுமக்கள் சந்தேகிக்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button