தமிழகம்

சமூக ஆர்வலருக்கு எதிராக பொங்கி எழுந்த பொங்குபாளையம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்

திருப்பூர் மாவட்டம் பொங்குபாளையம் ஊராட்சி மன்றத்தை சேர்ந்த ஒட்டுமொத்த உறுப்பினர்களும் சமூக ஆர்வலருக்கு எதிராக போர்கொடி தூக்கியிள்ளனர். பொங்குபாளையம் ஊராட்சி மன்ற பெண் தலைவராக சுலோச்சனா வடிவேல் என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் பொங்குபாளையம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவரின் தலையீடு அதிகம் இருப்பதாகவும், பல்வேறு அரசு திட்டங்களில். ஊழல் நடந்திருப்பதாக கூறி லஞ்ச ஒழிப்பு மற்றும் சட்டப்பாதுகாப்புக்குழு சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் இரா. சக்திவேல் என்கிற சமூக ஆர்வலர் உள்ளாட்சித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை உதவி இயக்குநர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு புகார் மனு அளித்துள்ளார்.

இந்நிலையில் திங்கட்கிழமை நடைபெறும் பொதுமக்கள் குறைதீர் முகாமிற்கு திரண்டு வந்த பொங்குபாளையம்.ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், தங்களது ஊராட்சி மன்றத்தின் மீது பொய் புகார் அளித்து வரும் சமூக ஆர்வலர் இரா. சதீஸ்குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதனை அடுத்து செத்தியாளர்களிடையே பேசிய உறுப்பினர்கள், சமூக ஆர்வலர் என்கிற போர்வையில் சுயவிளம்பரத்திற்காக ஊராட்சி நிர்வாகம் மீது சமூகவளைதளங்களில் பொய்யான செய்திகளை பரப்பி வருவதாகவும், இரா.சதீஸ்குமார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button