தமிழகம்

துருப்பிடித்த துப்பாக்கியும் 7 தோட்டாக்களுடன்- விமானநிலையம் வந்த காங்கிரஸ் நிர்வாகியிடம் விசாரணை

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவராக இருப்பவர் கே.எஸ்.பி.ஏ.தாங்கல். இவர் பெங்களூர் செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த போது அவரது உடைமைகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனையிட்டனர். அப்போது அவர் கொண்டு வந்த பையில் துருப்பிடித்த நிலையில் பழைய துப்பாக்கி ஒன்றும், ஏழு தோட்டாக்களும் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை பிடித்து அமர வைத்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

துருப்பிடித்த நிலையில் இருந்த அந்த துப்பாக்கிக்கு உரிய அனுமதி இருக்கிறதா என்பது குறித்தும் அதை எதற்கு எடுத்து வந்தார் என்பது குறித்தும் பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூர் செல்லும் அவசரத்தில் துப்பாக்கியுடன் விமான நிலையம் வந்துள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button