சினிமா

‘அவளுடன் நானும் இறந்து விட்டேன்’ : மகள் குறித்து விஜய் ஆண்டனி உருக்கமான கடிதம்

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் 2 மகள்கள் மற்றும் மனைவியுடன் விஜய் ஆன்டனி வசித்து வந்த நிலையில், அவரது மூத்த மகளான 12 ஆம் வகுப்பு படிக்கும் மீரா 2 நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் திரையுலகையே உலுக்கியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், மன அழுத்தத்தால் மீரா பாதிக்கப்பட்டிருந்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மகளின் மறைவுக்கு பின்னர் மிகவும் சோகமாக இருந்த விஜய் ஆன்டனி தற்போது கடிதம் ஒன்றை எழுதி மக்களுடன் தொடர்பு கொண்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-, அன்பு நெஞ்சங்களே, என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள். அவள் இப்போது இந்த உலகை விட சிறந்த ஜாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்குத்தான் சென்றிருக்கிறாள்.

என்னிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறாள். அவளுடன் நானும் இறந்து விட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்து விட்டேன். அவள் பெயரில் நான் செய்யப் போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும், அவளே தொடங்கி வைப்பாள். என்று கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button