மாவட்டம்

யானை தாக்கியதில் காயமடைந்தவர்களுக்கு, ஆறுதல் கூறி, நிவாரணம் வழங்கிய அமைச்சர் !

யானை தாக்கி கோயம்புத்தூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வரும் பாஸ்கர் என்பவரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து நிவாரண உதவி வழங்குகினார். தொடர்ந்து, யானை தாக்கி பூமார்க்கெட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வரும் ஹரிஷ் என்பவருக்கு நிவாரண உதவி வழங்கினார்.

பின்னர்,  தொண்டாமுத்தூர், விராலியூர் பகுதியில் யானை தாக்கி இறந்த கார்த்திக் இல்லத்தில் அவரது தாய், தந்தையை சந்தித்து ஆறுதல் தெரிவித்து, நிவாரண உதவி வழங்கப்பட்டது. முன்னதாக, கடந்த மாதம் 28 ஆம் தேதி கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த விராலியூர் பகுதியில் ஒரே நாளில் வெவ்வேறு சம்பவங்களில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 2 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button