மாவட்டம்

வருமானவரித்துறை ( போலி ) அதிகாரி கைது ! கடலூர் அருகே பரபரப்பு !

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி,  பண்ருட்டி பகுதிகளில் உள்ள பள்ளி,கல்லூரிகளில் சென்னையைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவர், தான் ஒரு வருமான வரித்துறை அதிகாரி எனவும், கணக்குகளை சோதனை செய்ய வந்துள்ளதாகவும் கூறி மிரட்டி பணம் பரித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத்தொடர்ந்து பண்ருட்டி அருகே உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பணிபுரியும் ஊழியரின் மனைவிக்கு வருமான வரித்துறை அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாகக்கூறி, போலி பணி ஆணை வழங்கி மூன்று லட்ச ரூபாய் பணம் கேட்டுள்ளார். பணி ஆணையை சோதனை செய்து பார்த்த போது, போலியானது என தெரிய வந்துள்ளது. இதையடுத்து சந்திரசேகரனிடம் பணத்தை குறிஞ்சிப்பாடியில் வந்து பெற்றுக் கொள்ளுமாறு கூறி குறிஞ்சிப்பாடி வரவழைத்துள்ளனர்.

அங்கு ஏற்கனவே பணம் கொடுத்து ஏமாந்த பள்ளி, கல்லூரி நிர்வாகிகள் சந்திரசேகரனை பிடித்து குறிஞ்சிப்பாடி போலீசில் ஒப்படைத்துள்ளனர். பின்னர் போலி வருமானவரித்துறை அதிகாரி எனக் கூறி பணம் பறித்ததாகவும்,  வருமானவரித்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் கேட்டு மோசடி செய்கிறார் என புகார் அளித்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து சந்திரசேகரன் மீது குறிஞ்சிப்பாடி போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

-கே.எம்.எஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button