மாவட்டம்

ஆட்டோ மற்றும் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்த இளம் ரவுடிகள் ! அச்சத்தில் பொதுமக்கள் !

சென்னை மாதவரம் பால்பண்ணை அடுத்த மாத்தூரில் குடிபோதையில் வந்த இளைஞர்கள் ஆட்டோ மற்றும் வீடுகளில் உள்ள ஜன்னல் கண்ணாடிகளை கத்தியால் அடித்து உடைத்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மாத்தூர் எம்.எம்.டி.ஏ மூன்றாவது தெருவில் அதிகாலை 2 மணியளவில் ஐந்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் குடிபோதையில் சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பத்துக்கும் மேற்பட்ட ஆட்டோவின் முன்பக்க கண்ணாடி மற்றும் பின்பக்க கண்ணாடிகளை உடைத்தும், வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தும் சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர் .

அதிகாலை நேரம் என்பதால் வீட்டில் உள்ளவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சமயம் நடந்த இந்த சம்பவத்தில் இருந்த மர்ம நபர்கள்  பற்றி தெரியவில்லை. உடனடியாக இந்த தகவல் மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்தப்பட்டது.

தகவல் அறிந்த மாதவரம் பால் பண்ணை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு, ரகளையில் ஈடுபட்ட நபர்களை அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை வைத்து தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து பால்பண்ணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button