மாவட்டம்

மர்ம நபர்களால் சேதப்படுத்தப்படும் மின் கம்பங்கள் ! கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகம் !

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள கீழ்பெருங்கரை கிராமத்தில் மின் கம்பங்களை மர்ம நபர்கள் சேதப்படுத்தி வருகின்றனர். இதனை ஊராட்சி மன்ற தலைவர் கண்டுகொள்ளாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது சம்பந்தமாக கிராம மக்கள் கூறுகையில்.. கீழப்பெருங்கரை கிராமத்தில் சுமார் 700 குடியிருப்புகள் உள்ளன. மதுரை-ராமேஸ்வரம் நான்கு வழிச் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இறங்கி ஊருக்குள் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். ஊருக்குள் செல்லும் வழியில் உள்ள மின்கம்பங்களை அடிக்கடி மர்ம நபர்கள் சேதப்படுத்தி வருகின்றனர். கடந்த ஆறு மாதத்தில் மட்டும் சுமார் ஐந்து மின்கம்பங்களை சேதப்படுத்தியுள்ளனர். இதனால் கிராமமே மின் விளக்குகள் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

இதனால் இரவு நேரங்களில் ஊருக்குள் வருவதற்கு பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் நடவடிக்கை எடுக்காமல் கண்டு கொள்ளாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே கீழப்பெருங்கரை கிராமத்தில் மின்கம்பங்களை சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், புதிய மின்கம்பங்களை அமைக்க வேண்டும் எனவும் கீழபெருங்கரை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button