மாவட்டம்

சாலைப் பணிகளால் போக்குவரத்து நெரிசல் ! தற்காலிக சாலை அமைக்க கோரிக்கை !

திருப்பூர் மாவட்டம் உடுமலை தாராபுரம் சாலையில், இந்திராநகர் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு  சாலையின் இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலையின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்லும் இவ்வழியில் பணிகள் தாமதமாக நடைபெறுவதால் அதிகளவில் வாகன நெரிசல் ஏற்படுவதோடு அவ்வப்போது விபத்துகளும் நடக்கிறது.

மேலும் ஒரே சமயத்தில் இரண்டு வாகனங்கள் கடந்து செல்வதில் பெரும் சிக்கல் ஏற்படுவதோடு  சாலை பணிகள் நடைபெறும் இடத்தில் தற்காலிக சாலை போடாததால் இரவு நேரங்கள் மற்றும் மழை பெய்யும் போது பயணம் செய்வது பெரும் சவாலாக உள்ளது. இரண்டு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் தரைப்பாலம் அமைக்கும் பணியை விரைவாக முடிப்பதோடு  தற்போது பொதுமக்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய தற்காலிகமாக தார் சாலை அமைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button